amutha malai polikirathu

புதன், 31 அக்டோபர், 2012

சமூக வலைத்தளங்களின் மூலம் இலகுவில் மோசடியில் சிக்குபவர்கள் ஆண்கள் தானாம். பெண்கள் இந்த மாதிரி விடயங்களில் சிக்கிக்கொள்வது மிகவும் குறைவாம்.

இதற்கு மோசடியாளர்கள் அதிகமாக பெண்களை பயன்படுத்தியே தமது வலையை விரிக்கின்றனர். இதனால் பெண்களை விட ஆண்களே இந்த மாதிரி சில்மிஷங்களில் சிக்கித்தவிக்கின்றனர்.
மற்றும் அமெரிக்காவில் 1,649  பேரளவில் மேற்கொண்ட ஆய்வில் இந்த சுவாரசியமான அறிக்கை வெளிவந்துள்ளது.
ஆண்கள் பெண்களை விட இலகுவில் செக்ஸுக்கு மயங்குவார்கள். கிடைக்கும் ஒவ்வொரு பந்துக்கும் சிக்ஸர் அடிக்க துடிக்கும் ஆண்களே இவ்வாறு சிக்கல்களில் மாட்டுவதாக அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது.
ஒரு சில பெண்களுக்கும் இதே செக்ஸ் குறை காரணியாக இருக்கிறது. இவர்களையும் இலகுவாக சமூக வலைத்தளங்களின் மூலமாக மடக்கி விட முடியும்.
facebook பாவிக்கும் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆண்களுக்கு வரும் friend request க்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிப்பதில்லையாம்.
ஆனால் பெண்கள் தமக்கு தெரிந்தவர்களை மட்டுமே ADD பண்ணுகிறார்கள். மற்றவர்களை ignore செய்கிறார்கள். கண்டபடி எல்லாவற்றையும் ADD பண்ணும் ஆண்களுக்கு தான் ஆப்புகள் அதிகமாக சொருவப்படுகின்றன.
 இவ்வாறானவர்களுக்கு தங்களது ரகசிய விடயங்களை பகிர்வதும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
இதுபோன்ற சமூகவலைத்தளங்கள் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில் வாழ்க்கையை தொலைத்து பின் தேடுவது முட்டாள் தனமானது.
கண்முன்னே பார்ப்பதெல்லாம் கவர்ச்சியாக தோன்றினாலும் உள்ளிருக்கும் ஆபத்து பின்னாளில் தான் தெரியவரும்.
தாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக நடந்து கொள்வதாக பெண்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

தாம்பத்ய உறவு என்பது இருவழிப்பாதையாக இருக்கவேண்டும். தம்பதியர் இருவரும் மனம் ஒன்றி ஈடுபட்டால் மட்டுமே அதில் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.

தாம்பத்திய உறவிற்கு முந்தைய விளையாட்டுக்களைத்தான் அனைவரும் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உறவிற்கு பிந்தைய விளையாட்டுக்கள் இருந்தால்தான் அன்றைய உறவு முழுமையடையவதாகவும், முழு திருப்தியுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம் கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன் மனைவியாக வாழ்க்கையில் இணைந்த பிறகு, “மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்” என்ற வரையறையையும் தாண்டி கணவன்- மனைவியர் மிகவும் அன்யோன்யமாக வாழ்வது என்பது இன்றைய காலக்கட்டத்தில் குறைந்து விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன், மனைவியையும், மனைவி கணவனையும் புரிந்து கொண்டு வாழும்போது தான் தம்பதியர் வாழ்க்கையில் சந்தோஷம் பூக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனைவி சொல்வதை அப்படியே சில கணவன்மார்கள் கேட்பார்கள். அதனால் தான் அப்படிச் சொன்னார்கள். இதேபோல், கணவன்மார்கள் சொல்வதை அப்படியே அவர்களது மனைவியர் கேட்க வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறை இருக்கிறது. அன்பாக,
பிரேசில் நாட்டு மாணவி, ( 20 வயது) தனது கற்பை இணைய தளத்தில், ஏலம் விட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் 4.5 கோடிக்கு இந்த பெண்ணின் கற்பை ஏலம் எடுத்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த, உடற்பயிற்சி கல்லூரி மாணவி, கட்டாரினா மிக்ளியோரினி, 20. இவர் சமீபத்தில், தனது கற்பை ஏலம் விடப்போவதாக இணைய தளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்போவதாக, தனது ஏல அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தியர் ருத்ர சாட்டர்ஜி, ஜப்பானை சேர்ந்த நாட்சு உள்பட 15 பேர், கட்டாரினாவின் கற்புக்கு ஏலம் கோரியிருந்தனர். ஆனால், ஜப்பான் நாட்டுக்காரர் நாட்சு, அதிக பட்சமாக, 4.5 கோடி ரூபாய்க்கு, கற்பை ஏலம் எடுத்தார். இந்த தொகைக்கு ஈடுகொடுக்க முடியாத ருத்ர சாட்டர்ஜி உள்ளிட்டோர், பின் வாங்கி விட்டனர்.
நாட்சு, விலை பேசி விட்டதால், அவரிடம் முறைப்படி, கட்டாரினா, தனது கற்பை ஒப்படைக்க உள்ளார். இதற்காக நாட்சுக்கு விமானம் ஒன்றை அனுப்பி அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ரகசியமான இடத்தில் “கற்பு’ ஒப்படைக்கப்பட உள்ளது.இதில் குறிப்பிடதக்க விடயம் என்னவெனில் 20 வயதுக் கன்னியுடன் உறவு வைக்க 1030 மில்லியன் ரூபாவுடன் போட்டிக்கு வந்த இந்தியர்!

திங்கள், 29 அக்டோபர், 2012

வர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. டிராகன் டி. ஜெய்ராஜ் அவர்களின் வர்மக்கலை மர்மங்கள் 108 விளக்கப் படங்களுடன் இக் கலையை விளக்குகின்றது.

வர்மம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர்.

பின்பற்றுபவர்கள்