amutha malai polikirathu

சனி, 28 ஏப்ரல், 2012

மயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறாரா…… கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தினால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்கமாகக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என்பதை சின்ன சின்ன சில்மிஷங்கள் மூலம் நாம் அறிந்து உறவுக்குள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால்  என்ன செய்ய வேண்டும்

சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட்ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.
பெரும்பாலான பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் பெரிய லிஸ்ட்டே தருவார்கள் ஆண்களிடம் பெண்களுக்கு பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய  கொடுப்பார்கள். அதில் சில

பெரும்பாலான ஆண்களை பொருத்தவரை செக்ஸ் உறவு என்பதை உடல்ரீதியான விஷயமாகவே கருதுகிறார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை அப்படி இல்லை அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் தான். உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.

சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான ஈடுபாட்டை தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை  கேட்பதா வேண்டாமா என முடிவு செய்யுங்கள்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012


ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும்போது முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்பது அனைத்தும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறது என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறியலாம்.

மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து அவரது மறுபிறவிகளை அறியலாம்.

பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்சக் காரகன் கேது. 12ஆம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை.

5ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. 5ஆம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.

அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம்.

இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

வியாழன், 26 ஏப்ரல், 2012


இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை.

கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது.

கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.

இந்து மதத்துக்கே உரியதான இத் தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வணிகர்களால் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

ஆதிகால கிரேக்க சமய மரபுகள் (Greek Gnosticism) இந்து சமய நம்பிக்கைகளை ஒத்திருக்கக் காணப்படுகின்றன.

எம்பிடொக்கில்ஸ், பைதகொறஸ் போன்ற பேரறிஞர்கள் மறுபிறப்புத் தத்துவத்தை மக்கள் மத்தியில் கூறிவந்தார்கள். இவர்களைத் தொடர்ந்து பிளாட்டோவும் மறுபிறப்பு நம்பிக்கையை வலியுறுத்தினார்.
யூதர்களின் வழிகாட்டியும், அவர்களின் சமயக் கோட்பாடுகளுக்கு ஆரம்ப வித்திட்டவருமான மோசஸ் பரப்பிய “கபாலா” தத்துவம் மறுபிறப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆனால் பின்னால் வந்த “மிஷ்னா”, “தல்முட்” என்ற யூத போதனைகளில் இத்தத்துவம் ஏனோ வலியுறுத்தப்படவில்லை.

ஆரம்பகால கிறிஸ்தவ தத்துவங்களிலும் சிந்தனைகளிலும் மறுபிறப்பு நம்பிக்கையின் பிரதிபலிப்புகள் இருந்ததென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
கி.பி. 538 – ம் ஆண்டின் கான்ஸ்டான்ட்டினோபிளில் நடைபெற்ற மகாநாட்டில் (Council of Constantinople) தான் முதல் தடவையாக ஜஸ்ரீனியன் என்ற பேரரசன் மறுபிறப்பில் நம்பிக்கை வைப்பது திருச்சபைக்கு இழிவு ஏற்படுத்தும் செயல் (Anathema) என்று சட்ட மூலமாகப் பிரகடனப்படுத்தினான்.

இஸ்லாம் மதத்தின் “சூஃபி” (sufi) பிரிவைச் சேர்ந்த மறைஞானி ஜெலாலுதீன் றூமி என்பவர் இவ்வாறு பாடினார்.

“நான் கனிப்பொருளாயிருந்தேன். பின், இறந்து
தாவரமாகினேன். பின் மிருகமாகி அவ்வுடலையும்
துறந்து மனிதனாகினேன். இறப்பதற்கு ஏன் நான்
பயப்படவேண்டும்? இறப்பதால் தான் நான்
உயர்வடைகிறேன். ஒரு காலத்தில் நான் தேவதூதர்
ஆவேன்…………………” 

(ஆதாரம் The mystics of Islam by Reynold.A Nicholson).
இப்பாடல் மாணிக்கவாசக சுவாமிகளின் பின்வரும் திருவாசகத்தை நினைவுறுத்துகிறது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்மிருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவாராயத் தேவராய்ச்
செல்லா அநின்றவித் தாவர சங்கமத்து
ளெல்லா பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்”.

மனிதன் முக்தியடையும்வரை அவனுடைய ஆத்மா பிறப்பெடுத்துக்கொண்டேயிருக்கு
ம் என்று இந்து சமயம் புகட்டுகிறது.

கி.மு. 5 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கசரித்திர ஆசிரியர் ஹெறோடொற்றஸ் (Herodotus) என்பவர் “எகிப்தியர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாயிருந்தனர் மனிதனின் ஆத்மா அழிவற்றது. மனிதன் இறந்தவுடன் இன்னொரு உடலினுள் அவனுடைய ஆத்மா புகுந்து விடுகிறது என்று நம்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

அலெக்சாந்திரியாவின் கிளமேந்து என்னும் போப்பாண்டவர் (2ம் நூற்றாண்டு) அதேகாலத்துப் பேரறிஞர் ஓறிஜின் ஆகியோரும் மறுபிறப்பு தத்துவத்தில் தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

ஜெருசலத்தில் பிரம்மாண்டமான தேவாலயத்தை நிறுவிய இஸ்ரவேல் நாட்டின் புகழ்பெற்ற மன்னன் சொலமன் (கி.மு 970 – 933) வெளியிட்ட “அறிவுக்களஞ்சியம்”  (book of wisdom) என்ற தனது நூலில் “நான் நல்லவனாயிருந்ததால் எனது ஆத்மா ஒருநல்ல உடலில் புகுந்து கொண்டது” என்று கூறியுள்ளார்.

மேற்கு நாட்டு அறிஞர்கள் பலர் மறுபிறப்பில் தமக்கு உண்டான நம்பிக்கையை தங்கள் நூல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த Samuel Alexander (1859 – 1939) பிறான்ஸ் தேசத்தைச் சேர்ந்த Henri Bergson (1859 – 1941) ஆகியோர் முக்கியமானவர்கள். அமெரிக்கப் பேரறிஞர் எமேர்சனும் (1803 – 82) மறுபிறப்புத் தத்துவத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த டாக்டர் இவான்ஸ் வென்ஸ் (Dr. Evans Ventz) ஒரு ஞான ஆராய்ச்சியாளர். இவர் 1958ம் ஆண்டு இலங்கை வானொலியில் உரையாற்றிய பொழுது, “இன்னும் ஐம்பது வருடங்களில் விஞ்ஞானிகள் மறு பிறப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிடுவார்கள்” என்று கூறினார்.

இன்றைய சமுதாயம் விஞ்ஞான அடிப்படையில் ஆய்ந்தறிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் சுபாவமுடையது. இருந்தும் இறப்புக்குப் பின் ஏதோவொரு வகையில் மனித வாழ்வு தொடர்கின்றது என்ற நம்பிக்கை இப்போது உலக மக்கள் மத்தியில் பரவலாக நிலை பெற்றுவிட்டது.

கடவுளை நம்புகிறவர்களுக்கு கர்மாவிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைப்பது தவிர்க்க முடியாததாகின்றது.
முற்பிறப்பு நினைவுகள்.

எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும்.

மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.

முற்பிறப்பு அனுபவங்கள் எமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் எம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன.
கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்திய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது நாங்கள் பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.

முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக எமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.

அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த பிறைடி மேர்பி (Bridey Murphy)என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்றுஅறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன.

இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.

சனி, 21 ஏப்ரல், 2012

பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை. தம்பதியரிடையே சின்ன சண்டை வந்தாலும் அதை ஊதி பெரிதாக்காமல் தவறு யார்மீது என்று கண்டறிந்து மனதார மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் வந்த சுவடு தெரியாமல் பிரச்சினை காணமல் போய்விடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். சொன்னதை செய்யலையா?

எங்காவது வெளியில் கூட்டிப்போகிறேன். சினிமாவுக்கு அழைத்துப்போகிறேன் என்று கூறிவிட்டு வேலைப்பளுவில் மறந்துவிட்டீர்களா? இது உங்கள் துணைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவே தவறாமல் மன்னிப்பு கேளுங்கள். உங்களின் சூழ்நிலையை அன்போடு புரிய வையுங்கள். வேலைப் பளுவின் எரிச்சலை மனைவி மீது காட்டினால் சண்டை மேலும் அதிகமாகும்.


வெறுப்பேற்றாதீர்கள்

சின்ன சின்ன தவறுக்கெல்லாம் எதையாவது குத்திக்காட்டி வெறுப்பேற்றாதீர்கள். இது தீர்க்க முடியாத சண்டையாக மாறிவிடும். தவறு எங்கு நிகழ்ந்தது என்பதை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும். தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்தபின்னர் காலம் தாழ்த்தாமல் கேட்கவேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்

செயல்களால் உணர்த்துங்கள்

உங்கள் தவறை நீங்கள் உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் வெறும் வார்த்தையாக கேட்பதை விட செயலால் உணர்த்துங்கள். ப்ளீஸ் இனிமேல் அதுபோல் நடக்காது என்று சொல்வதை விட உங்கள் துணைக்கு பிடித்தமான சமையலை செய்து அசத்தலாம். உங்கள் துணைக்கு தெரியாமல் இரவு டின்னருக்கோ, சினிமாவுக்கோ புக் செய்துவிட்டு வந்து அழைத்து போகலாம். சர்ப்ரைசாக இருக்கும்.

எல்லாம் சரியா இருக்கணும்

தவறுக்கு மன்னிப்பு கேட்ட உடனே எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கொஞ்சம் அமைதியாக இருங்கள் உடனே இருவரும் எங்காவது கிளம்பினால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தவறை உணர நேரம் கொடுங்கள். பிரச்சினையின் தன்மையை, தவறை இருவரும் யோசியுங்கள். பிறகு நடந்த தவறை மன்னித்து மறந்து விடுங்கள்.


மனிதர்களில் இரண்டு ரகம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.


காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்போதும் சந்தோஷத்துடன் இருப்பதுதான். ஆனால் இரண்டாவது ரகமான டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அழகு யாருக்கு

இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள் `ப்ரெஷ்” ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு

அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு முதுமை நம்மை அண்டாது விரட்டி விடுவோம்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும் அதை மனதில் எடுத்துக்கொள்லாமல் சந்தோஷமாக இருங்கள். ஆதலால் உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகும் இளமையும் உங்களை நாடி வரும்.


பின்பற்றுபவர்கள்