amutha malai polikirathu

புதன், 31 அக்டோபர், 2012

பிரேசில் நாட்டு மாணவி, ( 20 வயது) தனது கற்பை இணைய தளத்தில், ஏலம் விட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் 4.5 கோடிக்கு இந்த பெண்ணின் கற்பை ஏலம் எடுத்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்த, உடற்பயிற்சி கல்லூரி மாணவி, கட்டாரினா மிக்ளியோரினி, 20. இவர் சமீபத்தில், தனது கற்பை ஏலம் விடப்போவதாக இணைய தளத்தின் மூலம் அறிவிப்பு வெளியிட்டார். ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு, வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டி தரப்போவதாக, தனது ஏல அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தியர் ருத்ர சாட்டர்ஜி, ஜப்பானை சேர்ந்த நாட்சு உள்பட 15 பேர், கட்டாரினாவின் கற்புக்கு ஏலம் கோரியிருந்தனர். ஆனால், ஜப்பான் நாட்டுக்காரர் நாட்சு, அதிக பட்சமாக, 4.5 கோடி ரூபாய்க்கு, கற்பை ஏலம் எடுத்தார். இந்த தொகைக்கு ஈடுகொடுக்க முடியாத ருத்ர சாட்டர்ஜி உள்ளிட்டோர், பின் வாங்கி விட்டனர்.
நாட்சு, விலை பேசி விட்டதால், அவரிடம் முறைப்படி, கட்டாரினா, தனது கற்பை ஒப்படைக்க உள்ளார். இதற்காக நாட்சுக்கு விமானம் ஒன்றை அனுப்பி அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ரகசியமான இடத்தில் “கற்பு’ ஒப்படைக்கப்பட உள்ளது.இதில் குறிப்பிடதக்க விடயம் என்னவெனில் 20 வயதுக் கன்னியுடன் உறவு வைக்க 1030 மில்லியன் ரூபாவுடன் போட்டிக்கு வந்த இந்தியர்!

0 comments :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்